சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுப்பு: கடலூரில் விஜய் ரசிகர்கள் திடீர் சாலை மறியல்

கடலூரில் பீஸ்ட் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படாததால் விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூரில் விஜய் ரசிகர்கள் சாலை மறியல்
கடலூரில் விஜய் ரசிகர்கள் சாலை மறியல்
Published on

கடலூர்:

தமிழகம் முழுவதும் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13-ந் தேதி வெளிவர உள்ளது. விஜய் சினிமா ரிலீஸ் ஆகும் நேரத்தில் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி திரையரங்குகளில் காட்டப்படும்.

பீஸ்ட் படத்திற்கு விஜய் ரசிகர்கள் சிறப்புக் காட்சிக்காக கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள ஒரு தியேட்டருக்கு காலை முதலே கூட்டமாக திரண்டனர். ஆனால் அந்த தியேட்டரில் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்க கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு தலைமையில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார், கிழக்கு மாவட்ட பொருளாளர் சுகுமார் முன்னிலையில் இளைஞர் அணி நிர்வாகிகள் புருஷோத்தமன், பச்சையப்பன் மற்றும் ரசிகர்கள் அந்த திரையரங்கிற்கு வந்து சிறப்பு காட்சி ரத்து குறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அந்த பேச்சுவார்த்தை உடன்படாததால் அவர்கள் இன்று காலை அண்ணா சாலையில் சாலை மறியல் செய்தனர்.

தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் இதற்கு உடன்படாததால் புதுநகர் போலீசார் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை பிடித்து புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com