கடலூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து 26-ந்தேதி ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி சிபிஎம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது.
போராட்டம்
போராட்டம்
Published on

கடலூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி சிபிஎம் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் துரை, வி.சி.க மாவட்ட செயலாளர் அறவாழி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருதவாணன், உதயகுமார், ராஜேஷ்கண்ணன், சுப்புராயன், நகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் குளோப், நகர செயலாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது. மேலும் வேலைவாய்ப்புயின்மை அதிகரித்து உள்ளது. இதுமட்டுமின்றி பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன. காய்கறி, தானியங்கள், உணவு எண்ணெய் விலை என அனைத்துமே அதிகரித்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறைக்கு வழிவகுத்த அரசின் கொள்கைகளால் இப்போது மின்சார உற்பத்தியும் பாதித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்பில் இருந்து வருகின்றனர்.

ஆகையால் இதனை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் மே 26-ந்தேதி வட்ட தலைநகரான கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி ஆகிய மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது மே – 28, 29, 30, 31 தேதிகளில் வீடுவீடாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com