search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    கோபிசெட்டிபாளையம் அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    • கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • தாய் பிரியா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்குமார் (45). இவரது மனைவி பிரியா (40). இவர்களது மகள் ஜோசிகா (19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ஜோஷிகா கல்லூரி பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஜோஷிகா மன வருத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாய் அவருக்கு சமாதானம் கூறி வந்தார். இதையடுத்து ஜோஷிகா கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ஜோஷிகா நேற்று மாலை திடீரென வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். வேலைக்கு சென்று இருந்த அவரது தாய் பிரியா வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது ஜோஷிகா சேலையால் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டு வந்து ஜோஷிகாவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜோஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தாய் பிரியா கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×