பண்ருட்டி பஸ் நிலையத்தில் மூடப்பட்ட இலவச கழிப்பறை

பண்ருட்டி பஸ் நிலையத்தில் இலவச கழிவறையை மூடப்பட்டதால் பஸ் பயணிகள் ஓட்டுநர்,நடத்துனர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
பண்ருட்டி பஸ் நிலையத்தில் மூடப்பட்ட இலவச கழிப்பறை
பண்ருட்டி பஸ் நிலையத்தில் மூடப்பட்ட இலவச கழிப்பறை
Published on

பண்ருட்டி:

பண்ருட்டி நகராட்சிக்கு சொந்தமான பண்ருட்டி பஸ் நிலையத்தில் பஸ் பயணிகள் சிறுநீர் கழிக்க கடலூர் பஸ் நிறுத்தம் அருகில் இலவச கழிவறை அமைக்கப்பட்டிருந்தது இந்த கழிவறை முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் பாதுகாப்பற்று காணப்பட்டது. இதனை தொடர்ந்து முள்வேலி அமைத்து மூடப்பட்டது.

இந்த இலவச கழிவறையை மூடப்பட்டதால் பஸ் பயணிகள் ஓட்டுநர்,நடத்துனர் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த இலவச கழிப்பறையை உடனடியாக புதிப்பித்து திறக்க வேண்டும் என்று அதிமுக கவுன்சிலர் மோகன் நகராட்சி ஆணையரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து ஏராளமான பொருட்செலவில் இலவச கழிவறை சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com