

குரோம்பேட்டை அருகே உள்ள ராதா நகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை நெடுஞ்சாலைத்துறையின் உள் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். இதேபோல் தாம்பரம் பஸ் நிலையம் அருகில் உள்ள நடை மேம்பாலம், பெருங்களத்தூர் சாலை மேம்பாலம் மற்றும் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை பணிகளை கண்காணிப்புப்பொறியாளர் பழனி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.