சின்னசேலத்தில் கல்வீசி 2 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

சின்னசேலத்தில் கல்வீசி 2 அரசு பஸ் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
பஸ் கண்ணாடி உடைப்பு
Published on

சின்னசேலம்:

சின்னசேலம் புறவழிச்சாலையில் மூங்கில்பாடி பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவில் 2 அரசு பஸ்கள் அடுத்தடுத்து சென்று கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் சிலர் அந்த பஸ்களின் மீது கல்வீசி தாக்கினர். இதில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கண்ணாடிகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவமாக பயணிகள் உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com