

சென்னை:
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி சமீபத்தில் அறிவிக்கப்பட்டார். நாளை காலை 10 மணிக்கு அவர் தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
இதற்கான எளிய விழா சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்து வைப்பார்.