search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி மாணவி பலி
    X

    ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்து சென்னை மருத்துவக் கல்லூரி மாணவி பலி

    • ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி கார் தாறுமாறாக ஓடியது.
    • சாலையில் இருந்து வெளியே பாய்ந்து அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

    ஆம்பூர்:

    சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் மாணவ, மாணவிகள் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சண்முகி (22), நெல்லுரை சேர்ந்த நித்தின், கேரளாவை சேர்ந்த சுப்ரீத் (19), ரிஷாந்த் அகமது (20), அந்தமானை சேர்ந்த சுஜான்(18), ஆலினா (18) ஆகியோர் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஏலகிரி மலைக்கு காரில் புறப்பட்டு வந்தனர். ரிஷாந்த் அகமது காரை ஒட்டி வந்தார்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி கார் தாறுமாறாக ஓடியது. சாலையில் இருந்து வெளியே பாய்ந்து அங்கிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மாணவி சண்முகி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியான மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×