search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி தொழிலாளி பலி
    X

    திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கார் மோதி தொழிலாளி பலி

    • மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த நடுவக்கரை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி (வயது62). மண்பானை செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கஸ்தூரி. நேற்று மாலை கணவன்-மனைவி இருவரும் வியாபாரம் சம்பந்தமாக ஒரே மோட்டார் சைக்கிளில் புலியூர் நோக்கி சென்றனர்.

    திருக்கழுக்குன்றம் அருகே சென்றபோது மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முனுசாமியும், அவரது மனைவி கஸ்தூரியும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே முனுசாமி பரிதாபமாக இறந்தார். கஸ்தூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×