ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பத்தாரர்கள் இன்று முதல் 13- தேதி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பம்
விண்ணப்பம்
Published on

கடலூர்:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள வட்டார தளபதி பதவிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 20 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், நல்ல உடல்நலம் நல்ல ஒழுக்கம் உள்ளவராகவும், நிர்வாக திறமை மற்றும் சமூக சேவையில் ஈடுபடுபவராகவும், எந்த குற்றச்செயலிலும் ஈடுபடாதவராகவும், எந்த ஒரு ஜாதி மத அரசியலமைப்பில் இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும். ஊர்க்காவல் படையில் பணிபுரிந்தவராக இருந்தால் அதன் விபரம் தெரிவிக்க வேண்டும். ஊழியராக இருப்பின் தம் துறை அதிகாரியிடம் தடையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

எனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான விண்ணப்பத்தாரர்கள் இன்று முதல் 13- தேதி வரை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com