என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் கைது
- தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது.
- வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
சென்னை திருமங்கலத்தில் தொழில் அதிபர் ஒருவரை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் உள்பட 6 போலீசார் மீது வழக்கு போடப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Next Story






