search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.24 லட்சம் கடனுக்கு ரூ.1.7 கோடி கேட்டு  தொழில் அதிபரை கடத்திய கும்பல்- பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது
    X

    ரூ.24 லட்சம் கடனுக்கு ரூ.1.7 கோடி கேட்டு தொழில் அதிபரை கடத்திய கும்பல்- பிரபல ரவுடி உள்பட 2 பேர் கைது

    • சுப்ரமணியன் கடனுக்கு ரூ.90 லட்சம் கட்டிய நிலையில், மேலும் ரூ.70 லட்சம் கேட்டு சரண்யா தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • அவர் கொடுக்க மறுத்ததால் சரண்யா, பிரபல ரவுடியான டேவிட் என்ற உதயகுமார், குமார் உள்பட 6 பேர் சேர்ந்து சுப்ரமணியனை கடத்தி சென்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் பழைய கார்களை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சின்னதிருப்பதியை சேர்ந்த சரண்யா என்பவரிடம் 20 சதவீத வட்டிக்கு சுப்ரமணியன் ரூ.24 லட்சம் கடன் வாங்கினார். பணம் வாங்கிய பிறகு 30 சதவீதம் வட்டி தரவேண்டும் என்று சரண்யா கூறி உள்ளார். இதில் அவர்களுக்கிடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரமணியன் அந்த கடனுக்கு ரூ.90 லட்சம் கட்டிய நிலையில், மேலும் ரூ.70 லட்சம் கேட்டு சரண்யா தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் கொடுக்க மறுத்ததால் சரண்யா, பிரபல ரவுடியான டேவிட் என்ற உதயகுமார், குமார் உள்பட 6 பேர் சேர்ந்து சுப்ரமணியனை கடத்தி சென்றனர். இது குறித்து சுப்ரமணியனின் மனைவி அன்பரசி (வயது 36) சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி சுப்ரமணியனை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் டேவிட் என்ற உதயகுமார் மற்றும் கன்னங்குறிச்சியை சேர்ந்த குமார், சரண்யா உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் டேவிட் மற்றும் கன்னங்குறிச்சியை சேர்ந்த குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    மீட்கப்பட்ட சுப்ரமணியன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவாக உள்ள 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இதில் டேவிட் மீது ஜெயில் வார்டன் மாதேஷ் கொலை வழக்கு உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×