search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க டிராக்டர் மூலம் விழிப்புணர்வு பேரணி
    X

    பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க டிராக்டர் மூலம் விழிப்புணர்வு பேரணி

    • வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும்.
    • காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த டிராக்டர் பேரணி தனி மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை தலைமையில் நடைபெற்றது.

    அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    டிராக்டர்கள் அணி வகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.

    இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து உறுதி மொழி ஏற்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் நர்மதா, காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சுகுமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×