

கடலூர்:
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் பெண்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவர் பேசுகையில், பெண்கள் கருக்கலைப்பு செய்வதை தடுக்க வேண்டும்.
குழந்தை திருமணம் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி குடும்ப நலன் மற்றும் பெண்கள் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவர் பிரியதர்ஷினி, சப்இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தவமணி, ஏட்டு உமா மகேஸ்வரி, சத்யகலா கலந்து கொண்டனர்.