search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்
    X

    பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

    • பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்கள்.
    • கண்டக்டர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் நோக்கி தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் டிரைவராக பார்த்தி (30), கண்டக்டராக கிருஷ்ணன் (29) ஆகியோர் பணியில் இருந்தனர். இந்த பஸ் பேரம்பாக்கத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது புதுமா விலங்கை பகுதியில் பஸ்சை 4 பேர் வழிமறித்தனர்.

    அவர்கள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினார்கள். இந்த தாக்குதலில் கண்டக்டர் படுகாயம் அடைந்தார். அவர் திருவள்ளூர் அரசு மருத்து வகல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கண்டக்டர் கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×