search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.5 உயர்வு- ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி
    X

    திருப்பூரில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.5 உயர்வு- ஆடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி

    • 2-வது முறையாக இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ. 5 உயர்ந்தது.
    • நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக நூல் இருந்து வருகிறது. நூல் விலையை பொறுத்து ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தொழில்துறையினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில், நூல் விலையை நூற்பாலைகள் மாதத்திற்கு இருமுறை அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    அதன்படி செப்டம்பர் மாதம் 1-ந்தேதி நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தனர். இதில் 10 முதல் 30-வது கோம்டு வரை உள்ள நூல்கள் கிலோவுக்கு ரூ.7ம், 34 -வது கோம்டு மற்றும் அதற்கு மேல் கிலோ ரூ.5ம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் மாதத்தில் 2-வது முறையாக இன்று நூற்பாலைகள் நூல் விலையை அறிவித்தன. இதில் நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ. 5 உயர்ந்தது.

    அதன்படி தற்போது ஒரு கிலோவுக்கு 10-வது நம்பர் கோம்டு நூல் விலை ரூ.187-க்கும், 16-ம் நம்பர் ரூ.197-க்கும், 20-வது நம்பர் ரூ.255-க்கும், 24-வது நம்பர் ரூ.267-க்கும், 30-வது நம்பர் ரூ.277-க்கும், 34-வது நம்பர் ரூ.290-க்கும், 40-வது நம்பர் ரூ.310-க்கும், 20-வது நம்பர் செமி கோம்டு நூல் ரூ.247-க்கும், 24-வது நம்பர் ரூ.257-க்கும், 30-வது நம்பர் ரூ.267-க்கும், 34-வது நம்பர் ரூ.280-க்கும், 40-வது நம்பர் ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×