1,330 திருக்குறள்களை இடமிருந்து வலமாக எழுதி சாதித்த யோகா ஆசிரியை

திருக்குறள் குறித்து இன்றைய இளையதலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையை சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா 1,330 திருக்குறளையும் இடமிருந்து வலமாக 4.15 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார்.
யோகா ஆசிரியை கல்பனா திருக்குறளை இடமிருந்து வலமாக எழுதிய காட்சி
யோகா ஆசிரியை கல்பனா திருக்குறளை இடமிருந்து வலமாக எழுதிய காட்சி
Published on

திருவண்ணாமலை:

உலக பொதுமறை என்று போற்றப்படுவது திருக்குறள். இதனை இயற்றிய திருவள்ளுவர் நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான அறிவுப்பூர்வமான கருத்துக்களை எளிய முறையில் தெரிவித்துள்ளார்.

அதனை உலகம் முழுவதும் உள்ள அறிஞர்கள் போற்றி பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருக்குறள் குறித்து இன்றைய இளையதலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையை சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா 1,330 திருக்குறளையும் வலமிருந்து இடமாக 4.15 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்தார்.

இந்த நிகழ்ச்சி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் செயல்பட்டுவரும் உதவும் கரங்கள் ரமணா மறுவாழ்வு மையத்தில் நடைபெற்றது.

திருமண் குரூப்ஸ் மற்றும் உதவும் கரங்கள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. தொழில் அதிபர் கே.சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஏ.ராஜேந்திரன் கலந்துக் கொண்டுண்டு வலமிருந்து இடமாக திருக்குறளை எழுதும் சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலையை சேர்ந்த யோகா ஆசிரியை கல்பனா திருக்குறளை வலமிருந்து இடமாக எழுதி கண்ணாடியில் காண்பித்தார்.

அதில் திருக்குறள் நேராக தெரிந்தது. அப்போது அவர் இடமிருந்து வலமாக எழுதிய 1,330 திருக்குறளையும் அனைவரது பார்வைக்கும் காட்டினார். அவருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த சாதனை பற்றி கல்பனா கூறியதாவது:-

இளைய தலைமுறையினரிடம் திருக்குறள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருக்குறளை வலமிருந்து இடமாக எழுத தொடங்கினேன்.

4.15 மணி நேரத்தில் 1,330 திருக்குறளையும் எழுதி முடித்து விட்டேன். திருக்குறள் ரத்தின சுருக்கமாக எழுதப்பட்ட அறிவு பெட்டகம். இதில் இல்லாத கருத்துக்களே கிடையாது. இந்த ஒரு நூலை படித்தால் அனைத்து நூல்களையும் படித்த அறிவை பெற்றுவிடலாம் என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com