search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிரடி சோதனை- தனிப்படை போலீசார் ஒரே நாளில் 84 வழக்குகள் பதிவு
    X

    செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிரடி சோதனை- தனிப்படை போலீசார் ஒரே நாளில் 84 வழக்குகள் பதிவு

    • அனைத்து பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
    • தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா கடத்தல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகரம், செங்கல்பட்டு தாலுக்கா, பாலூர், திருப்போரூர், கேளம்பாக்கம், மானாமதி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், சட்ராஸ், செய்யூர், சித்தாமூர், அச்சிறுபாக்கம், மேல்மருவத்தூர், படாளம் மற்றும் சாலவாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கின்ற வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

    அதன்படி தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா, குட்கா கடத்தல் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் மொத்தம் 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×