search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதியமான்கோட்டையில் லாரி டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து 6¾ பவுன் நகை திருட்டு
    X

    அதியமான்கோட்டையில் லாரி டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து 6¾ பவுன் நகை திருட்டு

    • சிந்து அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே முத்துகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். லாரி டிரைவர். இவரது மனைவி சிந்து (வயது25). இந்த நிலையில் நேற்று முன்தினம் சிந்து தனது வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த செயின், தோடு உள்பட 6¾ பவுன் நகை மற்றும் ரூ.8 ஆயிரம் திருடு போய் இருந்தது. இதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இதுகுறித்து சிந்து அதியமான் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×