search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பூரில் சாலையில் நின்ற 6 கார்கள்- ஒரு ஆட்டோ கண்ணாடி உடைப்பு: 5 பேரை பிடித்து விசாரணை
    X

    பெரம்பூரில் சாலையில் நின்ற 6 கார்கள்- ஒரு ஆட்டோ கண்ணாடி உடைப்பு: 5 பேரை பிடித்து விசாரணை

    • சென்னை பெரம்பூரில் ஒரு திரையரங்கில் ரகளை செய்த ஒருவரை மட்டும் விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மற்ற 4 பேரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
    • அவர்கள் 4 பேரும் கென்னடி சதுக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்கள் மற்றும் 1 ஆட்டோ மீது கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரம்பூரில் ஒரு திரையரங்கில் 5 பேர் கொண்ட கும்பல் மது போதையில் ரகளையில் ஈடுபடுவதாக நேற்று நள்ளிரவு திரு.வி.க நகர் போலீசுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகளை செய்த ஒருவரை மட்டும் விசாரணைக்காக போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். மற்ற 4 பேரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் கென்னடி சதுக்கம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 கார்கள் மற்றும் 1 ஆட்டோ மீது கற்களால் தாக்கி கண்ணாடிகளை உடைத்தனர். இது பற்றி போலீசுக்கு புகார் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சத்யா (20), விஜய் (19) இம்மானுவேல் (19) மற்றும் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×