சென்னையில் 3 மாதத்தில் 51 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 51 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், கொரோனா நோய் பாதிப்பில் உயிர்காக்கும் மருந்துகளை பதுக்கி விற்பவர்கள் ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 34 பேர், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 13 பேர், கஞ்சா விற்பனை செய்த ஒரு குற்றவாளி, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த 2 பேர், மற்றும் சைபர் குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் என மொத்தம் 51 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கமி‌ஷனர் சங்கர் ஜீவால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com