search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் நிறுவன மேலாளரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல்- திருநங்கை உள்பட 3 பேர் கைது
    X

    தனியார் நிறுவன மேலாளரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல்- திருநங்கை உள்பட 3 பேர் கைது

    • சம்பவத்தன்று மேலாளர் வழக்கம் போல கிரைண்டர் செயலி மூலம் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்காக நண்பர்களை தேடி வந்தார்.
    • மேலாளர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 36 வயது வாலிபர். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளார்.

    ஓரின சேர்க்கையாளரான இவர் கிரைண்டர் செயலியை தனது செல்போனில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் நண்பர்களை தேடி அவர்களுடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று மேலாளர் வழக்கம் போல கிரைண்டர் செயலி மூலம் ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதற்காக நண்பர்களை தேடி வந்தார்.

    அப்போது அந்த செயலி மூலம் மேலாளருக்கு வடவள்ளி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த ரிஸ்வான் என்ற ரிஷி (வயது21) என்பவரின் அறிமுகம் கிடைத்தது.

    அந்த வாலிபர், மேலாளரிடம் நாம் ஜாலியாக இருக்கலாம் என கூறி அழைத்தார். இதனை உண்மை என நம்பிய மேலாளர், ரிஸ்வான் அழைத்த வடவள்ளி முல்லை நகரில் உள்ள கட்டி முடிக்கப்படாத கட்டிடத்துக்கு அவரது மொபட்டில் சென்றார்.

    பின்னர் ரிஸ்வான், மேலாளரை ஜாலியாக இருக்கலாம் என அந்த கட்டிடத்தில் உள்ள 3-வது மாடிக்கு அழைத்து சென்றார்.

    3-வது மாடிக்கு சென்றதும் அங்கு மறைந்து இருந்த ரிஸ்வானின் நண்பர் தில்லை நகரை சேர்ந்த அஜய் என்ற மெய்யரசு (20) என்பவர் மேலாளரை உருட்டு கட்டையால் தாக்கினார்.

    பின்னர் அவரிடம் இருந்த மொபட்டின் சாவியை பறித்தனர். தொடர்ந்து வாலிபர்கள் 2 பேரும் சேர்ந்து, மேலாளாரை நிர்வாணமாக்கி, அதனை தங்களது செல்போனில் வீடியோவாகவும் எடுத்து கொண்டனர்.

    மேலும் மேலாளரின் செல்போன் பறித்தனர். செல்போன் மூலம் மேலாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3ஆயிரம் பணத்தை ரிஸ்வானின் மனைவி அனுஸ்ரீ என்பவருக்கும், ரூ.30 ஆயிரம் பணத்தை அஜய் என்பவரின் தந்தையின் வங்கி கணக்கிற்கும் அனுப்பினர்.

    பின்னர் மேலாளரை வண்டியின் அர்.சி. புத்தகத்தை எடுத்து கொடுக்கும் படி கேட்டனர். இதனையடுத்து அவர்கள் மேலாளர் தங்கி இருக்கும் அறைக்கு அவரை மிரட்டி அழைத்து சென்றனர்.

    அறைக்கு கீழே ரிஸ்வான் மற்றும் அஜய் நின்று கொண்டு இருந்தனர். மேலாளர் மேலே சென்று வண்டியின் புத்தகத்தை எடுத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார்.

    பின்னர் அவர் இதுகுறித்து தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரது நண்பர்கள் வந்தனர். அவர்களுடன் மேலாளர் சென்றார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரிஸ்வான், அஜய் ஆகியோர் அங்கு இருந்து மொபட்டில் தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து மேலாளர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தனியார் நிறுவன மேலாளரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து மிரட்டி, அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்ததுடன், ரூ.33 பணம், செல்போன், மொபட் ஆகியவற்றை பறித்த ரிஸ்வான் அவரது மனைவி திருநங்கை அனுஸ்ரீ, அஜய் என்ற மெய்யரசு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×