பண்ருட்டியில் வீட்டுமனை பட்டா கேட்டு 200 குடும்பத்தினர் மனு- தாசில்தார் ஆய்வு

பண்ருட்டியில் வீட்டுமனை பட்டா கேட்டு 200 குடும்பத்தினர் மனு கொடுத்திருந்ததையடுத்து தாசில்தார் பல்லவ ராயன் நத்தம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார்
மனு
மனு
Published on

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அண்ணா கிராமம் ஒன்றியத்தை சேர்ந்த பாலூர் காலனி, பல்லவ ராயநத்தம் இருளர் குடியிருப்பு ஆகிய இடங்களில் ஆதி திராவிடர்கள் மற்றும் இருளர் வகுப்பை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு கொடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து பண்ருட்டி தாசில்தார் சிவா. கார்த்திகேயன் பாலூர், பல்லவ ராயன் நத்தம் பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தார். இவருடன் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ஸ்ரீதர், பண்ருட்டி மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், நெல்லிக்குப்பம் வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com