search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனியில் இன்று குட்டையில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி
    X

    தேனியில் இன்று குட்டையில் குளிக்கச்சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி

    • தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சிவராஜா மகன் சிவசாந்தன்(12). தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் வீரராகவன்(12). இவர்கள் 2 பேரும் தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மாலை விளையாட சென்ற அவர்கள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை தேனி ரெயில் நிலையம் அருகே இருந்த தற்காலிக குட்டையில் சிறுவர்களின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தேனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு சிறுவர்களின் உடல்களை சடலமாக மீட்டனர். பின்னர் இருவரது உடல்களும் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    பாதுகாப்பு இல்லாத குட்டை மற்றும் நீர்நிலைகளில் சிறுவர்கள் மூழ்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×