search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்டலூர் பூங்காவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேர் குவிந்தனர்
    X

    வண்டலூர் பூங்காவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேர் குவிந்தனர்

    • வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்.
    • பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    வண்டலூர்:

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார இறுதிநாள் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கடந்த 2 நாட்களாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வண்டலூர் பூங்காவில் குவிந்து இருந்தனர். இதனால் பூங்கா முழுவதும் கூட்டம் களை கட்டியது. வார இறுதி விடுமுறை நாளான கடந்த 2 நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

    கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது (டிசம்பர் 24,25 மற்றும் 26-ந்தேதிகளில்) 21 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான இன்று பார்வையாளர்கள் வருகை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். இதேபோல் புத்தாண்டு வார இறுதியிலும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

    Next Story
    ×