search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு - மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்
    X

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணனிடம் மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கிய போது எடுத்த படம்.

    ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு - மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்

    • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த வணிக வங்கி ஆகும்.
    • ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த வணிக வங்கி ஆகும். பிசினஸ் டுடே- கே.பி.எம்.ஜி. சார்பில் ஆண்டுதோறும் வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து, 37 தரக்கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில் விருது வழங்கி வருகிறது.

    சிறந்த வங்கி விருது

    இந்த நிலையில் ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா, மும்பையில் நடந்தது.

    விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணனிடம் விருதினை வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி பகவத் கிஷன்ராவ் கரட், பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ''விருது பெற்ற இந்த சிறப்பான தருணத்தில் இந்த விருதினை வங்கியின் அனைத்து உடமை தாரர்களுக்கும் உரித்தாக்குகிறேன். விருது பெற்ற மகிழ்ச்சியோடு, நாங்கள் இன்னும் இரட்டிப்பு முயற்சியோடு பணியாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு இந்த விருதினை தொடர்ந்து பெற வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது'' என்று கூறினார்.

    Next Story
    ×