என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு - மத்திய மந்திரி நிதின் கட்காரி விருது வழங்கினார்
- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த வணிக வங்கி ஆகும்.
- ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த வணிக வங்கி ஆகும். பிசினஸ் டுடே- கே.பி.எம்.ஜி. சார்பில் ஆண்டுதோறும் வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து, 37 தரக்கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில் விருது வழங்கி வருகிறது.
சிறந்த வங்கி விருது
இந்த நிலையில் ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா, மும்பையில் நடந்தது.
விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணனிடம் விருதினை வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி பகவத் கிஷன்ராவ் கரட், பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ''விருது பெற்ற இந்த சிறப்பான தருணத்தில் இந்த விருதினை வங்கியின் அனைத்து உடமை தாரர்களுக்கும் உரித்தாக்குகிறேன். விருது பெற்ற மகிழ்ச்சியோடு, நாங்கள் இன்னும் இரட்டிப்பு முயற்சியோடு பணியாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு இந்த விருதினை தொடர்ந்து பெற வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது'' என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்