search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனியாமூர் தனியார் பள்ளியை தமிழக அரசே நடத்த வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
    X

    கே.பாலகிருஷ்ணன், மு.க.ஸ்டாலின்

    கனியாமூர் தனியார் பள்ளியை தமிழக அரசே நடத்த வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

    • அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • சிபிசிஐடி போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான அமைக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை துரிதமாக நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டுகிறோம்.

    முதலமைச்சர் இப்பிரச்சனையில் தலையிட்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். கனியாமூர், சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்காவது தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும்.

    இவ்வாறு செய்வதே பள்ளி மாணவ, மாணவிகள் மனஉளைச்சலின்றி கல்வியில் கவனம் செலுத்திட இயலும். மாணவர்களின் கல்வி நலனை கவனத்தில் கொண்டு சிபிசிஐடி விசாரணையை விரைவாக முடித்து அதன் பின்னர் பள்ளி புனரமைப்பு பணிகளை அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளி நிர்வாகமே புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள அனுமதியை திரும்ப பெற வேண்டும். ஸ்ரீமதி மரணம் குறித்து அமைக்கப்பட்ட சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தி விரைவில் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்ய வேண்டும்.

    அப்பாவிகளை கைது செய்வது, குண்டர்சட்டத்தில் வழக்கு தொடுப்பது, சிறையில் அடைப்பது போன்ற போலீசாரின் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×