search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசிக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவது, காசி தமிழ் சங்கமத்திற்கு போட்டியா?- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
    X

    (கோப்பு படம்)

    காசிக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படுவது, காசி தமிழ் சங்கமத்திற்கு போட்டியா?- அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

    • தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசு பின்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.
    • பக்தர்களுக்குத் அடிப்படை வசதிகளை செய்து தர முதலமைச்சர் உத்தரவு.

    உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து 2,500க்கும் அதிகமான பக்தர்கள் ரெயில்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

    இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில்,காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்கள் என 200 பேரை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

    ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவோர் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காசி-தமிழ் சங்கமத்திற்கு போட்டியாக தமிழக அரசு காசி யாத்திரையை தொடங்கியுள்ளதாக கூறப்படுவது அறியாமையை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 27-ல், காசிக்கு 200 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அதற்கு தேவையான நிதி ரூ.50 லட்சத்தை தமிழக அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    தமிழக அரசின் திட்டங்களை மத்திய அரசும் மற்ற மாநில அரசுகளும் பின்பற்றும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம் ஆகும். இது யாருக்கும் எதிரான அரசு அல்ல, வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருக்குமான அரசு இது.

    யாருக்கும் போட்டி என்பது எங்கள் துறையின் நோக்கம் அல்ல. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற முதலமைச்சரின் உத்தரவின்படி தான் அறநிலையத்துறை செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

    Next Story
    ×