என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சூரசம்ஹார விழா
    X

    விழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்றார் (சிறப்பு அலங்காரத்தில் முருகர்).

    சூரசம்ஹார விழா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்தார்.
    • சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகியவைத்திய நாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 25ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது.

    தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனாகிய செல்வ முத்துக்குமா ரசாமிக்கு நாள்தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தன.

    விழாவில் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் விழா நடைபெற்றது. முன்னதாக சிறப்புவழி பாட்டுக்கு பின் நவரத்தின அலங்காரத்தில் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெ ருமான் கோவில் தங்க கொடிமரம் அருகே சிவபெருமானிடம் தங்கவேல் வாங்கி கோவிலை வலம் வந்து மேற்கு கோபு வாசல் வழியாக சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.

    சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் ஐதீக நிகழ்வு சிவாச்சாரி யார்களால் தருமபுரம் ஆதீனம் 27-வதுகுருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சா ரியார் சுவாமிகள் முன்னி லையில் நடைபெற்றது.

    இதில் வைத்தீஸ்வரன் கோயில் கட்டளைதிருநா வுக்கரசு தம்பிரான் சுவா மிகள், ஆன்மீகப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராம.சேயோன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், சீர்காழி நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, திமுக பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், சேவாதள காங்கிரஸ் மாநில செயலாளர் பால. எழிலரசன், மயிலாடுதுறை முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×