search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூங்கில்துறைப் பட்டில்  கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    மூங்கில்துறைப் பட்டில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 1 மாதத்திற்குள்ளாக அறுவடை செய்வதற்கு ஆலைநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப் பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், ஆலை வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட ப்பட்ட இணை மின் நிலைய பணிகளை தொடங்கி, விரைந்து முடித்திட வேண்டும். ஆலை இயங்கும்போது வெளியேறும் கரிதுகள்கள் பரவுவதை தடுப்பது, வெட்டு க்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும், விவசாயிகள் பயிர் செய்த கரும்புகளை 1 மாதத்திற்குள்ளாக அறுவடை செய்வதற்கு ஆலைநிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் முதல் தேதியில் அரவை பணியை தொடங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×