search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் திடீர் தீ விபத்து
    X

    உக்கடம் மீன்மார்க்கெட் பகுதியில் திடீர் தீ விபத்து

    • தினமும் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விற்பனை நடைபெற்று வருகிறது.
    • மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை.

    கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு கோவை மாநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும்.

    இந்த மீன் மார்க்கெட் அருகே புதர் மண்டிய பகுதி காணப்படுகிறது. இந்த பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அங்குள்ள பகுதிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை அங்கு மீன் கடை நடத்தி வருபவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. அங்கு மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×