search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 ஊராட்சிகளில் தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்கல்
    X

    3 ஊராட்சிகளில் தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்கல்

    • கபிலர்மலை வட்டாரத்தில் 3 கிராமங்களுக்கு தென்னங்கன்றுகளை மானிய விலையில் வழங்கப்பட்டது.
    • ஒரு குடும்பத்திற்கு 3 கன்றுகள் மட்டும் வழங்கப்படும்.

    பரமத்திவேலூர்:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் திட்டத்தின் கீழ் கபிலர்மலை வட்டாரம் பிலிக்கல்பாளையம், இருக்கூர், அ.குன்னத்தூர் ஆகிய 3 கிராமங்களுக்கு தென்னங்கன்றுகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணுடன் வந்து பதிவு செய்து கொள்ளுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    ஒரு குடும்பத்திற்கு 3 கன்றுகள் மட்டும் வழங்கப்படும். தென்னங் கன்றுகள் பெற தேவையான ஆவணங்கள் சிட்டா, ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்யுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை நலத்துறை இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×