search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா ஆய்வு
    X

    வளம் மீட்பு பூங்கா ஆய்வு செய்தனர்.

    பாபநாசம் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்கா ஆய்வு

    • பாபநாசம் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடி காரி பார்வையிட்டார்.
    • மக்கும் மற்றும் மக்காத குப்பை வகைகள் தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடி காரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மக்கும் மற்றும் மக்காத குப்பை வகைகள் தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

    குப்பைகளை வகை பிரித்து, தூய்மையான பேரூராட்சியினை உருவாக்குவதற்கு தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன், மாவட்ட உதவி செயற்பொறியாளர் மாதவன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர் கீர்த்திவாசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×