search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள் தேர்வு செய்யும் துறையில் தனித்துவமாக மிளிர வேண்டும்- சந்திராயன்திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேச்சு
    X

    மாணவர்கள் தேர்வு செய்யும் துறையில் தனித்துவமாக மிளிர வேண்டும்- சந்திராயன்திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேச்சு

    • விண்வெளியில் இதுவரை 94 விண்கலங்கள், 125 செயற்கைகோள் ஏவப்பட்டதாக தகவல்
    • இஸ்ரோவால் பல திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது என்று பெருமிதம்

    கோவை.

    கோவையில் நடந்த விழாவில் சந்திராயன்-3 திட்ட இயக்குனர் டாக்டர்.வீரமுத்துவேல் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விண்வெளியின் தந்தை என்றழைக்கப்படும், இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய். சைக்கிளில் துவங்கப்பட்ட இஸ்ரோ பயணம் தற்போது எந்தளவிற்கு வந்துள்ளது என்பதற்கு சந்திராயன் 3 சாட்சி.

    விண்வெளியில் 94 விண்கலங்கள் இதுவரை ஏவப்பட்டுள்ளது. 125 செயற்கைகோள் ஏவப்பட்டு உள்ளது.

    மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். மதிப்பெண்களும் முக்கியம் தான். இருப்பினும் நாம் தேர்வில் திறமையாகவும், தனித்துவமாகவும் இருக்க வேண்டும்.

    இஸ்ரோவில் விஞ்ஞானியாக இருப்பதற்கு மெக்கானிக் பொறியியல் என ஒரு துறை மட்டுமே படிப்பது என்று போதாது.

    பல்வேறு துறைகளின் அறிவும், தேர்வு செய்யும் துறையின் தனித்துவமாக மிளிர வேண்டும். அதனால், தேர்வு செய்யும் படிப்பில் திறம்பட படியுங்கள்.

    மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு மட்டுமின்றி இஸ்ரோவால் பல திட்டங்கள் மாணவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×