search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை தொடக்கப்பள்ளியில் தலைவர், துணை தலைவருக்கான மாணவர் தேர்தல்
    X

    கோவை தொடக்கப்பள்ளியில் தலைவர், துணை தலைவருக்கான மாணவர் தேர்தல்

    • மாணவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை தற்போது இருந்தே கற்று கொள்வார்கள்.
    • தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தலை மையில் மாதந் தோறும் ஒரு கூட்டம் நடத் தப்படும்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு பகுதியில் நல்லாயன் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 130 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் மாணவர் தேர்தல் வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்தல் கடந்த 1-ந் தேதி வேட்பு மனு தாக்கலுடன் தொடங்கியது.

    அன்று மாலை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த 4-ந் தேதி தேர்தலுக்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த தேர்தலில் மாணவர் தலைவர், துணைத் தலைவர், உணவுத்துறை தலைவர், விளையாட்டுத்துறை தலைவர், சுற்றுச்சூழல் துறை தலைவர் ஆகிய பதவிகளுக்காக மாணவர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் 4 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இன்று காலை பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    மாணவர்கள் அனைவருமே மிகுந் த ஆர்வத் துடன் வந்து வரிசை யில் நின்று தங்களது வாக்கை செலுத்தினர். வாக்களித்த மாணவர்களுக்கு விரலில் மை வைக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் 138 மாணவர்கள், 6 ஆசிரியர்கள், பள்ளி தாளாளர் ஒருவர், கல்வி அதிகாரி ஒருவர், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர் ஒருவர் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர் 118 பேர் என மொத் தம் 285 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு இன்று மாலை வரை நடக் கிறது. இந்த தேர்தல் குறித்து ஆசிரியர்கள் கூறிய தாவது:-

    மாணவர்களுக்கு ஜன நாயக மாண் பை தெரிந்து கொள்ளும் வகையில் இந்த தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

    தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தலை மையில் மாதந் தோறும் ஒரு கூட்டம் நடத் தப்படும். தேர்த லில் தேர்ந்த ெடு க்கப்பட்டவர்கள் கடமையை சரியாக செய்யா விட்டால் அவர்கள் மீது மாணவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாணவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு தேவையான தலைவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதை தற்போது இருந்தே கற்று கொள்வார்கள்.

    இது அவர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாக்கு எண்ணிக்கை வரும் 8-ந் தேதி நடக்கிறது.இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 11-ந் தேதி பதிவி பிரமாணம் எடுத்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×