search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி
    X

    பாவூர்சத்திரம் அருகே மாநில அளவிலான கைப்பந்து போட்டி

    • மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
    • 17 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினர் முதல் பரிசை பெற்றனர்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி முன்னாள் நிர்வாகி எஸ்.கே.பி. குத்தாலிங்க நாடார் நினைவு கைப்பந்து போட்டி நேற்று மடத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மதுரை மேட்டுப்பட்டி அணியினர் முதல் பரிசும், சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினர் 2-வது பரிசும், மடத்தூர் இந்து நடுநிலைப் பள்ளி அணியினர் 3-ம் பரிசும், நான்காம் பரிசை மம்சாபுரம் அணியினரும் பெற்றனர்.

    மாணவிகள் பிரிவில் முதல் பரிசு பரமகல்யாணி பள்ளி அணியினரும், 2-வது பரிசை எஸ்.என். அகாடமி அணியினரும், 3-ம் பரிசினை அழகர் கோவில் அணியினரும், 4-வது பரிசினை மடத்தூர் இந்து நடுநிலை பள்ளி மாணவிகளும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் முதல் பரிசை சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினரும், 2-வது பரிசினை மம்சாபுரம் அணியினரும், 3-ம் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் அணியினரும், 4-ம் பரிசை ராமேஸ்வரம் அணியினரும் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை பிரவீன் அகஸ்டின் செய்திருந்தார்.

    Next Story
    ×