மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் சாதனை

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் மதுரை ரைபில் கிளப் அரங்கத்தில் நடைபெற்றது.போட்டியில் மாணவர் ஆகாஷ் கிருஷ்ணா வெள்ளி பதக்கம் பெற்றார்.
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி- விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் சாதனை
Published on

நெல்லை:

48-வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகள் மதுரை ரைபில் கிளப் அரங்கத்தில் கடந்த 11-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 19 வயதிற்குட்பட்ட இளையோர்கள் 10 மீட்டர் ரைபிள் போட்டியில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆகாஷ் கிருஷ்ணா வெள்ளி பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அவரை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் முனைவர் திரு மாறன், பள்ளியின் முதல்வர் முருகவேள், பள்ளி ஒருங்கி ணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரி யர்கள் மோகன்குமார், பூச்சிய ம்மாள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com