புதிய கட்டிடத்தில் தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

சிறுவன் அவினேக் குமாரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி உள்ளார். சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
புதிய கட்டிடத்தில் தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
Published on

ஸ்ரீபெரும்புதூர்:

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் தாஸ்.இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பால்நல்லூர்பகுதியில் உள்ள புதியதாக கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார்.

கட்டிடம் கட்டும் இடத்திற்கு அருகில் தன் குடும்பத்துடன் தங்கி முகேஷ் தாஸ் வேலை செய்து வந்தார். அவினேக் குமார் வயது 6,என்கிற மகனும், அனுகுமாரி வயது 2 என்கிற மகளும், லலிதா குமாரி என்கிற மனைவியும் உள்ளனர். நேற்று மாலை சிறுவன் அவினேக் குமாரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் தேடி உள்ளார்.

அப்போது முகேஷ் தாஸ் தங்கி உள்ள இடத்திற்கு அருகே அவர் வேலை செய்யும் புதிய கட்டுமான பணிக்கு தோண்டபட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் சிறுவன் மூழ்கி பேச்சு மூச்சு இல்லாமல் மிதந்து உள்ளார். அவரை மீட்டு மாத்துரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com