search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோகனூர் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்த புள்ளிமான் குட்டி
    X

    வீதிகளில் துள்ளி விளையாடிய புள்ளிமான் குட்டியை பொதுமக்கள் பிடித்து வைத்திருந்தபோது எடுத்த படம்.

    மோகனூர் அருகே குடியிருப்பு பகுதிக்கு வந்த புள்ளிமான் குட்டி

    • எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் உள்ள வீதிகளில் மான்குட்டி ஒன்று துள்ளி குதித்து விளையாடிக் கொண்டி ருந்தது.
    • இதைப் பார்த்த அப்பகு தியைச் சேர்ந்த‌ வர்கள் மான்குட்டியை பிடித்தனர். .

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் தாலுகா, எஸ்.வாழவந்தி அருகே உள்ள மேலப்பட்டி பகுதியில் உள்ள வீதிகளில் மான்குட்டி ஒன்று துள்ளி குதித்து விளையாடிக் கொண்டி ருந்தது. இதைப் பார்த்த அப்பகு தியைச் சேர்ந்த வர்கள் மான்குட்டியை பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் வந்து மான்குட்டியை ஆவலு டன் பார்த்து சென்றனர்.

    பின்னர் மாவட்ட வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த வனவர்கள் ரமேஷ் மற்றும் தங்கராஜ் ஆகியோர் மான்குட்டியை மீட்டு நாமக்கல் கால்நடை மருத்து வமனைக்கு கொண்டு சென்று நேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.

    இந்த மான்குட்டி இன்று வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×