பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

காவல்துறை, சிறுவர் மனமகிழ் மன்றம் சார்பில் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
Published on

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி காவல் நிலையம் அருகில் காவல்துறை, சிறுவர் மனமகிழ் மன்றம் சார்பில் பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வேப்பனப்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணகிரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள்.

வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான குழந்தைகள் பெற்றோர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com