search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் பேச்சு, கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    நீலகிரியில் பேச்சு, கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

    • கலெக்டர் அம்ரித் வழங்கினார்
    • பொதுமக்களிடமிருந்து 108 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

    ஊட்டி :

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 108 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

    மாணவர்களுக்கு பரிசு

    இதைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் 11 -ம் வகுப்பு மாணவி கி ஸ்ருதி கிருஷ்ணாவுக்கு ரூ.5,000, இரண்டாம் இடம் பிடித்த அம்பலமூலா அரசு மேநிலைப் பள்ளியைச் சோ்ந்த 12 -ம் வகுப்பு மாணவன் பிரியதா்ஷனுக்கு ரூ.3,000,மூன்றாம் இடத்தைப் பிடித்த கோத்தகிரி புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஜெ.பூமிகாவுக்கு ரூ.2,000 மற்றும் கக்குச்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி வைஷ்ணவி, பந்தலூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிரித்தா ஆகியோருக்கு சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ.2,000-த்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினாா்.

    மேலும், கல்லூரி அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதல் இடத்தைப் பிடித்த ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவன் சி.சுதிருக்கு ரூ.5,000, இரண்டாம் இடத்தைப் பிடித்த ஊட்டி எமரால்டு ஹைட்ஸ் மகளிா் கல்லூரி மாணவி து.சவுந்தா்யாவுக்கு ரூ.3,000, குன்னூா் பிராவிடன்ஸ் கல்லூரி மாணவி ம.கீா்த்தனாவுக்கு ரூ.2,000-த்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.

    பேச்சுப்போட்டி

    அதேபோல, முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்த ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவன் அ.முகமது இலியாஸுக்கு ரூ.5,000, குன்னூா் பிராவிடன்ஸ் மகளிா் கல்லூரி மாணவி பா.சோபிகாவுக்கு ரூ.3,000, மூன்றாம் இடத்தைப் பிடித்த ஊட்டிஅரசு கலைக் கல்லூரி மாணவி ச.கல்பனா சாவ்லாவுக்கு ரூ.2,000த்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினாா்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் மு.சம்சுதீன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

    Next Story
    ×