search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணா பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி
    X

    கோப்பு படம்

    அண்ணா பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி

    • மாணவ-மாணவி களிடையே பேச்சுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 15ந் தேதி காலை 1 0 மணி முதல் நடை பெறவுள்ளது.
    • போட்டிக்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட ப்பட்டது.

    இவ்வறிவிப்பின்படி நிகழாண்டில் (2023-2024) அண்ணா பிறந்தநாளை யொட்டி கல்லூரி களில் பயிலும் மாணவ-மாணவி களிடையே பேச்சுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 15ந் தேதி காலை 1 0 மணி முதல் நடை பெறவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.

    அண்ணாவும் மேடைப் பேச்சும், கடமை, கண்ணியம், கட்டு பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெ ல்லும், ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவ ர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். மேலும், பேச்சு ப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து போட்டி க்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்பு டைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மா வட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×