search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே முத்துக்கருப்பணசாமி கோவிலில் புரவி எடுப்பு திருவிழா கிடாய்கள் வெட்டி அன்னதானம்
    X

    புரவிஎடுப்பு திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்களை படத்தில் காணலாம்.

    நத்தம் அருகே முத்துக்கருப்பணசாமி கோவிலில் புரவி எடுப்பு திருவிழா கிடாய்கள் வெட்டி அன்னதானம்

    • பெரியஅரவங்குறிச்சியில் கரையம்மன், மலையம்மன், முத்துக்கருப்பணசாமி கோவில்களின் திருவிழா நடந்தது.
    • சுமார் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    செந்துறை:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பெரியஅரவங்குறிச்சியில் கரையம்மன், மலையம்மன், முத்துக்கருப்பணசாமி கோவில்களின் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த 24-ம் தேதி சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து அன்று வாணவேடிக்கைகளுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்வு நடந்தது. மறுநாள் கரையம்மனுக்கு பொங்கல் வைத்து கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதனைதொடர்ந்து குதிரை, நாய், காளை, மதிலை சிலைகள் பெரிய அரவங்குறிச்சியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது.

    தொடர்ந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பூசாரி வகையறாக்கள், 8 ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    மேலும் இந்த திருவிழா 5 வருடங்களுக்கு பிறகு நடந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×