search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

    • மாரியம்மனுக்கு 11 லிட்டர் பால் மூலம் பாலாபிஷேகம் செய்தனர்.
    • 100 நெய்தீபம் ஏற்றி மணிப்பூர் மக்களுக்காக அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    தஞ்சாவூர்:

    மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டி தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில் ஜோதி அறக்க ட்டளை ஏற்பாட்டில் தஞ்சை நகர பெண்கள் ஒன்றுகூடி சிறப்பு வழிபாடு செய்தனர்.

    இதுகுறிந்து அவர்கள் கூறுகையில்:- மணிப்பூரில் மீண்டும் அமைதி திரும்புவதற்காகவும், பாதிக்கப்பட்ட மக்களை காப்பதற்காகவும் மாரியம்மனுக்கு 11 லிட்டர் பால் மூலம் பாலாபிஷேகம் செய்து, 100 நெய்தீபம் ஏற்றி மணிப்பூர் மக்களுக்காக அர்ச்சனை செய்து வழிபட்டோம் என்றனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×