search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
    X

    கால்நடை முகாம் நடந்தது.

    சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

    • புல் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • முகாமில் கிடோரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், அக்கரைவட்டம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இதில் நோயுற்ற கால்நடைகளுக்கு மருத்துவம் சினை பெறாத கால்நடைகளுக்கு மலடு நீக்கி சிகிச்சை, பருவத்தில் உள்ள பசு எருமைகளுக்கு இலவசமாக செயற்கை முறை கருவூட்டல், ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு குடல் புழு நீக்கம், மேலும் உற்பத்தி திறன் அதிகரிக்க கால்நடைகளுக்கு ஆண்மை நீக்கம், தஞ்சாவூர் கால்நடை பெரும்பாக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி திட்டத்தினால் புல் வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் முகாமில் கிடோரி கன்றுகள் பேரணி நடத்தப்பட்டு சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இம் மருத்துவ முகாமி ல்கால்நடை ஆய்வாளர் செல்வேந்திரன், கால்நடை மருத்துவர்கள் கலியபெ ருமாள், தினேஷ்குமார், ஆகியோர் கொண்ட குழுவினர் ஆலோசனை வழங்கினர் மேலும் கால்நடை மருத்துவ முகாமி ல் காண ஏற்பா டுகளை அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணை யன் சிறப்பாக செய்திருந்தார். முகாமில் அக்கரைவட்டம் கிராமம் அதனை சுற்றியுள்ள கிராம சேர்ந்தவர்கள் தனது கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றனர்.

    Next Story
    ×