search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அம்மன் கோவிலில்  ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டி சிறப்பு பூஜை
    X

    பூஜையில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.


    தூத்துக்குடி அம்மன் கோவிலில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டி சிறப்பு பூஜை

    • ஸ்ரீபேராட்சி செல்வி அம்மன் கோவிலில் சிறப்பு யாகங்கள் பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
    • சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர முழுவதும் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களில் தசரா பண்டிகை நடைபெற்றது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் சப்பர பவனி நடைபெற்றன.

    தூத்துக்குடி கடலோர பகுதி மக்கள் உட்பட பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கும் மட்டக்கடை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபேராட்சி செல்வி அம்மன் கோவிலில் தசரா பண்டிகை 10-ம் திருநாள் அன்று ஸ்டெர்லைட் சார்பில் பல்வேறு சிறப்பு யாகங்கள் பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. 10-ம் திருநாள் சிறப்பு பூஜையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும், நாட்டில் தொழில் வளம் பெருக வேண்டும், ஸ்டெர்லைட் அனைத்து ஊழியர்களும் நலம் பெற வேண்டும் என்று என வேண்டுதல்கள் வைக்கப்பட்டன.

    இதில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மட்டக்கடை பகுதியிலுள்ள ஒரு பகுதி மக்கள், ஸ்டெர்லைட் நிறுவன அலுவலர்கள் ஏராளமானவர் இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    Next Story
    ×