search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    முன்னாள் படைவீரர்களின் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெறவுள்ளது.
    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.7.2023 அன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்ட முப்படையில் பணிபுரிந்து வெளி வந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 24.7.2023 அன்று மாலை 4 மணியளவில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நடைபெறவுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் குறைகள் ஏதேனுமிருப்பின் தங்களது குறைகளை கோரிக்கை மனுவாக இரட்டை பிரதிகளில் தருமபுரி மாவட்ட கலெக்டர் அவர்களிடம் நேரில் அளிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×