search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை - அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை சிறப்பு முகாம்
    X

    தஞ்சை - அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை சிறப்பு முகாம்

    • சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் நடைபெற உள்ளது.
    • கும்பகோணம் பஸ் நிலையம் அருகில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழக அரசு மாற்று திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறா தவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு 3 கோட்ட அளவில் நடைபெற உள்ளது.

    தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெறுகிறது.

    இதேபோல் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகம் பேருந்து நிலையம் அருகில் வரும் 18-ம் தேதியும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் கிராம சேவை கட்டிடத்தில் 22-ம் தேதியும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றி தழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திற னாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×