search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி ரெயில் நிலையங்களில் தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு
    X

    தருமபுரி ரெயில் நிலையங்களில் தென்மேற்கு கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

    • பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.
    • குறிப்பாக தருமபுரி ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

    தருமபுரி,

    தென் மேற்கு ரெயில்வே து றை சார்பில் தருமபுரி, சிவாடி, தொப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது. மேலும் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நவீன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் நிலை யங்களில் மேற்கொள்ளப் பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் நவீன வசதிகள் குறித்து பெங்க ளுரு தென் மேற்கு ரெயில்வே கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அந்தந்த ரெயில் நிலைய ங்களில் உள்ள நடை மேடைகள், பயணிகள் அறை, டிக்கெட் முன்பதிவு மையங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

    அப்போது ரெயில் நிலையத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    குறிப்பாக தருமபுரி ரெயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள பூங்கா, பயணிகளுக்காக புதிதாக ஏற்படுத்த ப்பட்டுள்ள லிப்ட் வசதிகள் உள்ளிட்டவைகளை தென்மேற்கு கோட்ட மேலா ளர் யோகேஷ் மோகன் பார்வையிட்டார்.

    தருமபுரி ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதி க்காக மேற்கொள்ள ப்பட பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின் போது ரெயில்வே துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×