search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரம் போப் கல்லூரியில் நாசரேத் திருமண்டல கல்லூரிகளுடன் தென்கொரியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
    X

    சாயர்புரம் போப் கல்லூரியில் நாசரேத் திருமண்டல கல்லூரிகளுடன் தென்கொரியா நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

    • ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்கொரியாவிலுள்ள ஐ.என்.சி.ஹச்.இ. என்ற நிறுவனத்திற்கும், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் கல்லூரிகளான போப் கல்லூரி, சாயர்புரம், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி மற்றும் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் ஆரம்ப ஜெபம் செய்தார்.

    கல்லூரி முதல்வர் செல்வக்குமார் வரவேற்று பேசினார். திமோத்தி ரவீந்தர் தலைமை உரையாற்றினார். இதனையடுத்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தென்கொரியா ஐ.என்.சி.ஹச்.இ. இயக்குனர் கிம், போப் கல்லூரி செயலர், தநீகர் பிரின்ஸ் கிப்சன், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி செயலாளர் பிரேம்குமார் ராஜாசிங், ஐ.என்.சி.ஹச்.இ. மண்டல ஒருங்கிணைப்பாளர் டேனியல் எழிலரசு, ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    நிகழ்ச்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி செயலர் ஜெயக்குமார் ரூபன் உள்ளிட்டோர் பேசினர். முடிவில் நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முதல்வர் ஜவகர் சாமுவேல் நன்றி கூறினார். இம்மானுவேல் வான்ஸ்றக் இறுதி ஜெபம் செய்தார். பேராசிரியர்கள் ஜீவராணி தங்கம், பிரிங்கிள் குயின்ஸ்டா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இதில் போப் கல்லூரி வேதியல் துறை உதவி பேராசிரியை கரோலின் டெய்சி, உடற்கல்வி இயக்குனர் ஜோன்ஸ் ராஜன், பேராசிரியர்கள் குட்டி ஜாஸ்கர், சாந்தினி கிரேஸ், ஆசீர், தினகர், கிறிஸ்டோபர், பொன்சாம், மரிய ஜெயோன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×